sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்

/

2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்

2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்

2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 21, 2025 01:52 AM

Google News

ADDED : நவ 21, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், உழவர் அலுவலர் தொடர்பு-2.0 திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில், நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் திவ்யா தலைமை வகித்தார். துணை செயலாளர் சுகன்யா முன்னிலை வகித்தார்.

இதில், தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறை சார்பில், கொண்டு வரப்பட்டுள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்-2.0 என்ற அரசு ஆணையை விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும்.இத்துறையில் பணியாற்றும் அலுவலர்களை, பிற துறையுடன் இணைக்கும்போது, நாட்டில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என கோஷம் எழுப்பினர்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 15 வட்டாரங்களில் இருந்தும் தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், 100க்-கும் மேற்பட்டோர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us