/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மா.திறனாளிக்கு உபகரணம் வழங்கல்
/
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மா.திறனாளிக்கு உபகரணம் வழங்கல்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மா.திறனாளிக்கு உபகரணம் வழங்கல்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மா.திறனாளிக்கு உபகரணம் வழங்கல்
ADDED : மே 06, 2025 02:11 AM
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 561 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க
உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஐந்து பேருக்கு, 39,636 ரூபாய் மதிப்பில், திறன் பேசி, காதொலி கருவி, மடக்கு சக்கர நாற்காலி, பிரெய்லி கடிகாரம் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, இரண்டு பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ப.வேலுார் தாலுகா, கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராணி, பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் செல்வன் குமரவேல், 2019ல், காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, முதல்வரின் பொது நிவாரண நிதி உதவியாக, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
மேலும், 2022ல், கொடிநாளை முன்னிட்டு, அதிகளவில் நிதி திரட்டிய அரசுத்துறை அலுவலர்களுக்கு, வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.