sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உலக அரங்கில் இந்திய சுற்றுலாத்துறை சாதிக்க வாய்ப்பு மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து

/

உலக அரங்கில் இந்திய சுற்றுலாத்துறை சாதிக்க வாய்ப்பு மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து

உலக அரங்கில் இந்திய சுற்றுலாத்துறை சாதிக்க வாய்ப்பு மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து

உலக அரங்கில் இந்திய சுற்றுலாத்துறை சாதிக்க வாய்ப்பு மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து


ADDED : பிப் 02, 2025 03:36 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை, நேற்று தாக்கல் செய்தார். அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

ஆர்.வேலுசாமி, மாநில தலைவர், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்: விவசா-யிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யாமல், கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்தி, மேலும் விவசாயி-களை கடன் சுமைக்கு ஆளாக்குகின்றனர். உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை படிப்படி-யாக குறைத்ததால், நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

ஆர்.பிரணவகுமார், ஒருங்கிணைப்பாளர், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பட்டதாரிகள் கூட்டமைப்பு: நாடு முழுவதும், 50 சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தவது, மருத்துவ சுற்றுலாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, அனைத்து சுற்றுலா தலங்க-ளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவது, உள்நாட்டு சுற்றுலா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் வகையிலும், உலக அரங்கில் இந்திய சுற்றுலாத்துறை சாதிக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

கே.சிங்காரம், வெண்ணந்துார் விசைத்தறி சங்க முன்னாள் பொருளாளர்: விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு மூலம் கடன், 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்-ளது. மேலும், விவசாயிகளுக்கான கடன் தொகையில் மானியம், 3,000ல் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி உள்ளது பாராட்டத்தக்-கது. நெசவு தொழிலுக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பெ. சரவணன், இயற்கை விவசாயி, ராசிபுரம்: மூத்த குடிமக்-களின் சேமிப்பு மீது வரி விலக்கு, 50,000 ரூபாயில் இருந்து, ஒரு லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்புக்குரியது. கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும், 'ஜல்ஜீவன்' திட்-டத்தை, 2028 வரை நீட்டிப்பு செய்துள்ளதால் கிராம மக்கள் பயன்பெறுவர். மேலும், விவசாயத்திற்கு இந்த பட்ஜெட்டில் எப்-போதும் இல்லாத அளவிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அ.சுகந்தி, கல்வியாளர், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், நாமகி-ரிப்பேட்டை: தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்களை கொண்டு வர நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. மருத்துவ படிப்புக்கு அடுத்த, 5 ஆண்டுகளில், 75,000 கூடுதல் இடங்களை அகில இந்திய அளவில் ஏற்படுத்த உள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கதக்கது. அரசு பள்ளி மாணவர்கள் திறனை மேம்படுத்த, 50,000 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என தெரி-வித்துள்ளனர். இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

வி.டி. கருணாநிதி, தலைமை ஆலோசகர், தமிழ்நாடு விசைத்-தறி சங்க கூட்டமைப்பு, பள்ளிப்பாளையம்: மின்சார வாகனம், மொபைல் பேட்டரி உற்பத்திக்கு வரி சலுகை, புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்படும். பதிவு செய்யப்பட்ட சிறு தொழில் துறையினருக்கு, 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம், 20 கோடி ரூபா-யாக அதிகரிப்பு போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன. இது, தொழில்களுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்டாக உள்ளது.






      Dinamalar
      Follow us