/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி
/
சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி
ADDED : பிப் 14, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார், அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, சவுதாபுரம், அத்தனுார், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, தேங்கல்பாளையம், குட்டலாடம்பட்டி, ஆர்.புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
நேற்று வழக்கத்தை விட, வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்தது. சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். சாலைகளில் கோடை காலத்தை போல கானல் நீர் தோன்றியது. இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர், வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் முகம் மற்றும் தலையை துணியால் மூடியபடி சென்றனர்.

