sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் இ.வி.எம்., மிஷின் சரிபார்ப்பு பணி பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் கமிஷனர் ஆய்வு

/

மாவட்டத்தில் இ.வி.எம்., மிஷின் சரிபார்ப்பு பணி பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் கமிஷனர் ஆய்வு

மாவட்டத்தில் இ.வி.எம்., மிஷின் சரிபார்ப்பு பணி பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் கமிஷனர் ஆய்வு

மாவட்டத்தில் இ.வி.எம்., மிஷின் சரிபார்ப்பு பணி பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் கமிஷனர் ஆய்வு


ADDED : டிச 13, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்., மிஷின்) சரிபார்ப்பு பணியை, பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் கமிஷனர் எஸ்.எஸ்.பால் ஆய்வு செய்தார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எலக்ட்ரானிக் ஓட்-டுப்பதிவு இயந்திர கிடங்கில், மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும், சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு தேவையான இ.வி.எம்., மஷின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.தமிழக சட்டசபை தேர்தல்-2026ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, முதல் கட்ட சரிபார்ப்பு பணி, நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. பெல் நிறுவ-னத்தின் தொழில் நுட்ப அலுவலர்கள், அப்பணியில் ஈடுபட்டுள்-ளனர்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்காமூர்த்தி முன்னிலையில், தமிழக இ.வி.எம்., மிஷின் சரிபார்க்கும் பணி பார்வையாளரும், பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் கமிஷனரு-மான எஸ்.எஸ்.பால், இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்க்கும் பணியை ஆய்வு செய்தார்.

அப்போது, 'இ.வி.எம்., சரிபார்க்கும் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்கள் எவ்வித தடைகளுமின்றி ஓட்டுப்போடும் வகையில் சரிபார்ப்பு பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்-தினார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் மேற்பார்வையில், தாசில்-தார்கள், துணை தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், கிராம உதவியா-ளர்கள் உள்பட, 100 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து, 22 நாட்கள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us