sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.பாளையத்தில் வெளுத்து வாங்கிய மழை குளமாக மாறிய ரயில்வே சுரங்கப்பாதை

/

ப.பாளையத்தில் வெளுத்து வாங்கிய மழை குளமாக மாறிய ரயில்வே சுரங்கப்பாதை

ப.பாளையத்தில் வெளுத்து வாங்கிய மழை குளமாக மாறிய ரயில்வே சுரங்கப்பாதை

ப.பாளையத்தில் வெளுத்து வாங்கிய மழை குளமாக மாறிய ரயில்வே சுரங்கப்பாதை


ADDED : ஜூலை 17, 2025 02:16 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழை நீர் ஆறாக சென்றது. காவிரி சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

பள்ளிப்பாளைம் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 4:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. அரைமணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. காவிரி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல தேங்கியது.

இதனால் இந்த சுரங்கப்பாதை வழியாக திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை, சோழசிராமணி, மொளசி, தாஜ்நகர், எஸ்.பி.பி., காலனி, ஆயக்காட்டூர் உள்ளிட்ட முக்கிய பகுதிக்கு சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததால், பலரும் மாற்று வழியில் சென்றனர்.

ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருப்பது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விரைந்து வந்து, மோட்டார் மூலம் தேங்கி இருந்த மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது, சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது.

மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் தானியங்கி மோட்டாரை சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us