/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருப்பில் புகுந்த ராஜா வாய்க்கால் நீர்
/
குடியிருப்பில் புகுந்த ராஜா வாய்க்கால் நீர்
ADDED : ஜூலை 26, 2025 01:33 AM
ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 17வது வார்டு ராஜா வாய்க்கால் கரையோரம் உள்ளது. நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில் ராஜா வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்து, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பொதுமக்கள் சுதாரிப்பதற்குள், வீட்டில் வைத்திருந்த மளிகை பொருட்கள், தரை தளத்தில் இருந்த துணிமணிகள், இதர பொருட்கள் நீரில் நனைந்தன.
உடனடியாக, அப்பகுதி இளைஞர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ராஜா வாய்க்கால் நீர் திறப்பு பகுதியில் நீர் குறைத்து வரவும், மாற்று வழிகளில் நீர் வெளியேற ஏற்பாடு செய்தனர். இதனால், நான்கு மணி நேரம் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்தனர்.
காலை, 9:00 மணி அளவில் தண்ணீர் வடிந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சண்முகம் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்டு, இதேபோல் மீண்டும் சம்பவம் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.