/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர்கள் கைது
/
போதைப்பொருள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர்கள் கைது
ADDED : நவ 09, 2024 03:58 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த பச்சாம்பா-ளையம் பகுதியில், நேற்று காலை வெப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சங்ககிரியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்-டனர்.
அந்த வாகனத்தில் குட்கா, கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள், 195 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்-பட்டது.
இதையடுத்து, போதைப்பொருட்கள் கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த இந்துசிங், 25, அசோக்ரானா, 24, ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து, போதைப்பொருள் மற்றும் சரக்கு வாக-னத்தை பறிமுதல் செய்தனர். இந்த போதை பொருட்கள், பெங்க-ளூரில் இருந்து ஈரோடு, பெருந்துறை பகுதிக்கு கொண்டு செல்-லப்பட்டது தெரியவந்தது.