sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரி - திருமணிமுத்தாறை இணைக்க வலியுறுத்தி பேரணி

/

காவிரி - திருமணிமுத்தாறை இணைக்க வலியுறுத்தி பேரணி

காவிரி - திருமணிமுத்தாறை இணைக்க வலியுறுத்தி பேரணி

காவிரி - திருமணிமுத்தாறை இணைக்க வலியுறுத்தி பேரணி


ADDED : செப் 13, 2025 01:37 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, இருசக்கர வாகன பேரணி நடந்தது. மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25 கிராமங்களை உள்ளடக்கிய, 30 கி.மீ., துாரம், இருசக்கர வாகன பேரணியை, முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு துவக்கி வைத்தார். அவர் கூறுகையில், ''மேட்டூர் அணை உபரி நீரை, திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ., மோளிப்பள்ளி ராமசாமி, சட்டசபையில் இதுகுறித்து கோரிக்கை வைத்தார். இதற்கு, அப்போதைய அரசு, '50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்' என, தெரிவித்தது. ஆனால், இதுவரை அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. எனவே, காவிரி - திருமணிமுத்தாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us