sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மொபைல் கடையில் திருட்டு ராசிபுரம் போலீசார் விசாரணை

/

மொபைல் கடையில் திருட்டு ராசிபுரம் போலீசார் விசாரணை

மொபைல் கடையில் திருட்டு ராசிபுரம் போலீசார் விசாரணை

மொபைல் கடையில் திருட்டு ராசிபுரம் போலீசார் விசாரணை


ADDED : ஆக 23, 2025 01:31 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த குருக்கபுரம் பகுதியில் தமிழரசன் என்பவர், மாருதி மொபைல்ஸ் என்ற பெயரில் மொபைல் போன்கள் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு, கடையை பூட்டி சென்றனர். பின், நேற்று கடையை திறக்க வந்த கடை ஊழியர்கள், கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தமிழரசன், கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அதிகாலை, 2:00 மணியளவில் கடைக்கு வந்த மர்ம நபர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்கிறார்.

பின், கடையில் இருந்த, ஒன்பது புதிய மொபைல் போன்கள் மற்றும் சர்வீசுக்காக கொண்டுவரப்பட்ட மொபைல் போன்கள், ரொக்க பணம், 6,000 ரூபாய் மற்றும் பல்வேறு உபரி பொருட்கள் உள்ளிட்டவை திருடிக்கொண்டு சாவகாசமாக செல்வது தெரியவந்தது.

கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை கைகளை கொண்டு மறைத்தபடி, மர்ம நபர் திருடியுள்ளார். ஆனால், அவர் முகம் தெரியும் அளவிற்கு வீடியோக பதிவாகி உள்ளது. இதுகுறித்து புகார்படி, ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us