/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரியல் எஸ்டேட் புரோக்கர் தற்கொலை; வழக்கு: முக்கிய குற்றவாளி சிக்கினார்
/
ரியல் எஸ்டேட் புரோக்கர் தற்கொலை; வழக்கு: முக்கிய குற்றவாளி சிக்கினார்
ரியல் எஸ்டேட் புரோக்கர் தற்கொலை; வழக்கு: முக்கிய குற்றவாளி சிக்கினார்
ரியல் எஸ்டேட் புரோக்கர் தற்கொலை; வழக்கு: முக்கிய குற்றவாளி சிக்கினார்
ADDED : ஆக 07, 2024 07:24 AM
ப.வேலுார்: கந்துவட்டி கொடுமையால், 'வீடியோ' வெளியிட்டு ரியல் எஸ்டேட் புரோக்கர் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய, தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் முக்கிய குற்றவாளியை, நேற்று கைது செய்தனர்.ப.வேலுார் அருகே, பொய்யேரியை சேர்ந்தவர் மணிகண்டன், 42; ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் கடந்த, ஆறு மாதத்துக்கு முன் நன்செய் இடையாறை சேர்ந்த சோமசுந்தரம், லட்சுமி தம்பதியரிடம், மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். சில மாதங்களாக வட்டி, அசலை செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதனால், கடந்த ஜூலை, 16ல் மணிகண்டன் வீட்டுக்கு சென்ற சோமசுந்தரம், லட்சுமி தம்பதியர், 3 லட்சம் ரூபாய்க்கு வட்டி, அசல் சேர்த்து, 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், அன்றிரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுப்படி, கந்துவட்டி கும்பலை கைது செய்ய இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில், எஸ்.ஐ.,க்கள் மோகன், முருகேசன், செந்தில்குமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நன்செய் இடையாறை சேர்ந்த சோமசுந்தரம், 73, என்பவரை கைது செய்தனர். மற்ற நபர்களை தீவிரவாக தேடி வருகின்றனர்.