sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆற்றில் வரும் புது தண்ணீர் காய்ச்சி குடிக்க வேண்டுகோள்

/

ஆற்றில் வரும் புது தண்ணீர் காய்ச்சி குடிக்க வேண்டுகோள்

ஆற்றில் வரும் புது தண்ணீர் காய்ச்சி குடிக்க வேண்டுகோள்

ஆற்றில் வரும் புது தண்ணீர் காய்ச்சி குடிக்க வேண்டுகோள்


ADDED : ஆக 11, 2025 05:57 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: 'காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால், புது தண்ணீர் வருவது அதிகரித்துள்ளதால், பொது-மக்கள், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்' என, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவர் வேண்-டுகோள் விடுத்துள்ளார்.

பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, பள்ளிப்பா-ளையம் நகரம், ஒன்றியம், படவீடு, ஆலாம்பா-ளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட மாவட்-டத்தின் பல பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்-பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், செந்நிறத்தில் புது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இது குறித்து பள்ளிப்பாளையம் அரசு மருத்துவர் வீரமணி கூறுகையில்,''தற்போது ஆற்றில் அதிக-ளவு புது தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் உடல் பிரச்ச-னைகள் பாதி குறைந்துவிடும். மழை காலம் என்பதால், மழை நீர் தேங்காதவாறு வீட்டை சுற்-றிலும் துாய்மை வைத்திருக்க வேண்டும். இதனால் கொசு மூலம் பரவும் நோய்களை தடுக்-கலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us