ADDED : நவ 09, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவ-சாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, முதல்வருக்கு அனுப்-பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து, கள்ளுக்குண்டான தடையை நீக்கி, தமிழகம் முழுவதும், தமிழக அரசு கள்ளுக்கடையை திறந்தால், 50 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெறுவதுடன், பல ஆயிரக்-கணக்கான தென்னை மற்றும் பனை தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.