/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலை அமைக்க கோரிக்கை
/
ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலை அமைக்க கோரிக்கை
ADDED : டிச 18, 2025 05:49 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் ஆக்கிரமிப்பை அகற்-றிய பின், சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிப்பா-ளையம் ஆர்.எஸ்., சாலை வழியாக, தினமும் பஸ், லாரி, கார், சரக்கு வாகனம், டூவீலர் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறத்திலும், ஆக்கிர-மிப்பு அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் சாலை குறு-கியதாக மாறிவிட்டது. இதனால் அடிக்கடி விபத்தும், போக்குவ-ரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
குறிப்பாக, இரவில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள், கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்-துக்கொண்டே வருகிறது. தற்போது இந்த சாலையை புதுப்-பிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், பழைய தார்ச்சாலை பெயர்த்து எடுக்கப்பட்-டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்-பட உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

