sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் தொழிற்பேட்டை துவங்க கோரிக்கை

/

மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் தொழிற்பேட்டை துவங்க கோரிக்கை

மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் தொழிற்பேட்டை துவங்க கோரிக்கை

மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் தொழிற்பேட்டை துவங்க கோரிக்கை


ADDED : ஜூலை 07, 2025 04:31 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில், லாரி பாடி பில்டிங் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்' என, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல், வேலகவுண்டம்பட்டி அடுத்த முசிறி கிராமத்தில், நாமக்கல் மாவட்ட கனரக வாகனங்கள் பாடி கட்டுமான தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிளஸ்டர்) தொடங்குவதற்காக, 10 ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தப்-பட்டது. தொடர்ந்து, அங்கு லாரி பில்டிங் தொழில்பேட்டை அமைப்பதற்கான, அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காக, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தார்ச்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன்மூலம், தமிழக அரசு சார்பில், பல-கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

இதையடுத்து, அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இது-வரை அங்கு எந்தவிதமான தொழில் நிறுவனங்களும் வர-வில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், எம்.பி., மாதேஸ்-வரன், தமிழக தொழில்துறை அமைச்சரை சந்தித்து, நாமக்கல்லில் லாரி தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

முசிறி பஞ்சாயத்தில் உள்ள இடம் எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் காலியாக உள்ளதால், அந்த இடத்தில் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு லாரி தொழில் பூங்கா அமைப்ப-தற்கு தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற பல இடங்கள், நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே தொழிற்பேட்டை என அறிவிக்கப்பட்டு, எந்த வித-மான பயன்பாடும் இல்லாமல் காலி நிலமாக கிடக்கின்றன. அதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில், தொழிற்-பேட்டை துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, புதிதாக சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதாக கூறி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us