sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆன்லைன் மூலம் பதிவு செய்த லாரிகளுக்கு அரசு நேரடியாக மணல் வழங்க கோரிக்கை

/

ஆன்லைன் மூலம் பதிவு செய்த லாரிகளுக்கு அரசு நேரடியாக மணல் வழங்க கோரிக்கை

ஆன்லைன் மூலம் பதிவு செய்த லாரிகளுக்கு அரசு நேரடியாக மணல் வழங்க கோரிக்கை

ஆன்லைன் மூலம் பதிவு செய்த லாரிகளுக்கு அரசு நேரடியாக மணல் வழங்க கோரிக்கை


ADDED : நவ 09, 2025 03:33 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''மணல் குவாரிகள் திறந்ததும், ஆன்லைனில் பதிவு செய்த வாக-னங்களுக்கு, அரசு நேரடியாக மணல் வழங்க வேண்டும்,'' என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ராஜசேகர் கூறினார்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. சங்க மாநில தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 75,000 மணல் லாரிகள் இயங்கிக்கொண்டிருந்தன. மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்ததை அடுத்து, இரண்டு ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால், பலர் லாரிகளை விற்பனை செய்துவிட்டனர். தற்-போது, தமிழகம் முழுவதும், 50,000 மணல் லாரிகள் உள்ளன. இவைகளை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி

வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தமிழக அரசு சார்பில், நாமக்கல் மாவட்டம், நன்செய் இடையாறு உள்ளிட்ட, எட்டு இடங்களில் அரசு மணல் குவா-ரிகள் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குவாரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, லாரிகள் சென்று-வர பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அரசு, மணல் குவாரிகள் திறப்பதற்கு முன், மணல் லாரி உரிமை-யாளர்கள், பொதுமக்களை அழைத்துபேசி, மணலுக்கு குறைந்த விலை நிர்ணயித்து, பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே குறைந்த விலையில் எம்.சாண்ட் பயன்ப-டுத்தி வருபவர்கள், அதிக விலைக்கு மணல் விற்பனை செய்தால் வாங்க முன்வரமாட்டார்கள். மேலும், அரசு குத்தகைதாரர்களை நியமித்து அவர்கள் மூலம் இரண்டாம் விற்பனையாக மணல் வழங்கினால், பல்வேறு முறைகேடுகள் நடந்து, மணல் விலை அதிகரிக்கும். இவ்வாறு, ஏற்கனவே நடந்த முறைகேட்டால், 4,500 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமலாக்-கத்துறை கணக்கிட்டுள்ளது.

அதனால், தமிழக அரசு ஆன்லைன் மூலம் பதிவு செய்த வாகனங்-களுக்கு நேரடியாக மணல் விற்பனை செய்ய முன்வர வேண்டும். பிரியாரிட்டி என்ற அடிப்படையில், அரசியல்வாதிகளுக்கு முன்-னுரிமை கொடுக்காமல், அனைத்து லாரிகளுக்கும் வரிசைப்படி மணல் வழங்க வேண்டும். தமிழக அரசு ஆன்லைன் மூலம் மணல் வழங்காமல், கான்ட்ராக்டர்கள் மூலம் மணல் விற்பனை செய்தால், மணல் விலை கண்டிப்பாக அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால், பொதுமக்களை ஒன்று திரட்டி மணல் லாரி உரிமையா-ளர்கள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சங்க பொருளாளர் பரமசிவம், இணை செயலாளர் சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் மணி, தங்கவேல், கரூர் மாவட்ட நிர்-வாகிகள் மணி, பன்னீர், வெங்கடாஜலம் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us