/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொத்தடிமைகளாக பணியாற்றிய செங்கல் தொழிலாளர் 5 பேர் மீட்பு
/
கொத்தடிமைகளாக பணியாற்றிய செங்கல் தொழிலாளர் 5 பேர் மீட்பு
கொத்தடிமைகளாக பணியாற்றிய செங்கல் தொழிலாளர் 5 பேர் மீட்பு
கொத்தடிமைகளாக பணியாற்றிய செங்கல் தொழிலாளர் 5 பேர் மீட்பு
ADDED : ஜூலை 02, 2024 07:56 AM
சேந்தமங்கலம்: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணி-யாற்றிய, 5 பேர் மீட்கப்பட்டு, அதன் உரிமை-யாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சேந்தமங்கலம் அருகே, வடுகப்பட்டியை சேர்ந்-தவர் கருப்பாயி, 65. இவர், முத்துக்காப்பட்டியில் நிலத்தை வாடகைக்கு எடுத்து செங்கல் சூளை நடத்தி வருகிறார். இங்கு, கடலுார் மாவட்டம், பல்லவராய நத்தம், பாரதி நகரை சேர்ந்த தேவ-கண்ணு, 40, பூமிநாதன், 45, சிற்றரசன், 27 உள்பட, 5 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக, சிதம்பரம்பட்டி வி.ஏ.ஓ., சுதாவிற்கு புகார் சென்-றது.
இதையடுத்து அங்கு சென்ற, வி.ஏ.ஓ., அங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த, 5 பேரையும் மீட்டு, கருப்பாயி மீது வழக்குப்பதிவு செய்தனர்.