sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ.10.91 லட்சம் மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கல்

/

ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ.10.91 லட்சம் மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கல்

ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ.10.91 லட்சம் மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கல்

ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ.10.91 லட்சம் மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கல்


ADDED : ஜூலை 20, 2025 07:48 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட, 10.91 லட்சம் ரூபாய், மாவட்ட மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்தப்பட்டது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, ஆறு லட்சத்து, 63,507 ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி, நான்கு லட்சத்து, 27,764 ரூபாய் என, மொத்தம், 10.91 லச்சம் ரூபாய்க்கான காசோலையை கூட்டுறவாளர்கள் வழங்கினர்.

நாமக்கல் மாவட்டத்தில், வானக்காரன்புதுார், என்.வெள்ளாளப்பட்டி, எம்.புதுக்கோம்பை, பழையபாளையம், கெஜக்கோம்பை, புதுக்கோம்பை, போடிநாயக்கன்பட்டி, ரெட்டிப்பட்டி, பொட்டணம், மின்னாம்பள்ளி, புதுச்சத்திரம் உள்ளிட்ட, 32 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்ளன. அவற்றில் இருந்து பெறப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, 10.91 லட்சம் ரூபாய்க்கான காசோலை, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, ஆவின் பொது மேலாளர் சண்முகம், பால்வளம் துணைப்பதிவாளர் சண்முகநதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us