sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை

/

மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை

மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை

மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை


ADDED : அக் 25, 2025 01:38 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, ப.வேலுார் நீர்வளத்-துறை உதவி செயற்பொறியாளர் வினோத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் அதிகளவு திறந்து விடப்படலாம்.

நேற்று இரவு முதல், மேட்டூர் அணையில் இருந்து, 65,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆற்றின் கரையோரம் உள்ள சோழசிராமணி, மாரப்பம்-பாளையம்,குரும்பல மகாதேவி, அரசம்பாளையம், ஜேடர்பாளையம் அணைக்கட்டு, ஜேடர்பாளையம் பரிசல் துறை, கண்டிப்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்துார், கு.அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனுார், ப.வேலுார், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம், 1077, காவல்துறை, 100, தீயணைப்பு துறை, 101, மருத்-துவ உதவி, 104, ஆம்புலன்ஸ்உதவி, 108 ஆகிய எண்களில் சம்-பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us