sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2025 பிப்., 2ல் நடத்த மகாசபை கூட்டத்தில் தீர்மானம்

/

பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2025 பிப்., 2ல் நடத்த மகாசபை கூட்டத்தில் தீர்மானம்

பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2025 பிப்., 2ல் நடத்த மகாசபை கூட்டத்தில் தீர்மானம்

பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2025 பிப்., 2ல் நடத்த மகாசபை கூட்டத்தில் தீர்மானம்


ADDED : டிச 26, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 26-

'பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 2025 பிப்., 2ல் சிறப்பாக நடத்துவது' என, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பெரியூரில் பிரசித்திபெற்ற மருதகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கொங்கு வேளாளர் சமூகத்தின் பண்ணை குலம் மற்றும் துாரன் குலத்தாருக்கு பாத்தியப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பின், மிகுந்த பொருட்செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருங்கற்களால் கட்டப்படும், 5 நிலை ராஜகோபுரம், முன்புறம் பிரமாண்டமான கொடிக்கம்பம், அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சுற்றுச்சுவர் மற்றும் ஆகம விதிமுறைப்படி கர்ப்பகிரகத்தின் மேல் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரம் போன்ற சிறப்பம்சங்களுடன் கும்பாபிஷேக பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. வரும், 2025 பிப்ரவரியில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.

இதையடுத்து, கோவில் குடிப்பாட்டுகாரர்கள் மகாசபை கூட்டம், நேற்று நடந்தது. பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவரும், மருதகாளியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவருமான சந்திரமோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கோவில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்று, வரும் பிப்., 2ல் கும்பாபிஷேக விழாவை மிக சிறப்பாக நடத்துவது என்றும், விழாவிற்கான பல்வேறு பணிகளை மேற்கொள்ள தனித்தனியாக குழுக்கள் அமைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, பழனிவேலு, ராமசாமி, குமாரசாமி, திருப்பணி குழு தலைவர் பாலசுப்ரமணியன், உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், பண்ணை குலம் மற்றும் துாரன் குலம் குடிப்பாட்டு மக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us