sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நாமக்கல்லில் காத்திருப்பு போராட்டம்

/

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நாமக்கல்லில் காத்திருப்பு போராட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நாமக்கல்லில் காத்திருப்பு போராட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நாமக்கல்லில் காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 06, 2025 05:54 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்புபடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த காத்திருப்பு போராட்டம், நேற்று பகல், 3:00 முதல், மாலை, 6:00 மணி வரை நீடித்தது.

அதேபோல், மோகனுார் தாலுகா அலுவலகத்தில், வட்ட தலைவர் கணபதி தலைமையில், 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* திருச்செங்கோடு வட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்க மாநில செயலாளர் செங்கமலை தலைமை வகித்தார். வட்டார தலைவர் கார்த்திகேயன், வட்டார செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.






      Dinamalar
      Follow us