ADDED : ஜன 12, 2026 05:16 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், போர்வெல் வாகனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரு-கின்றன. இதுகுறித்து, தமிழ்நாடு ரிக் உரிமையா-ளர்கள் சம்மேளன மாநில தலைவர் சுரேஷ் கூறி-யதாவது:
கடந்த, 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட், இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்ப-டுத்தி, உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும்.மேலும், இந்த பிட்டிற்கு மூலப்பொருட்கள், சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகி-றது. கார்பன் இறக்குமதிக்கு தடையை நீக்கி, மத்-திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், காவல்து-றையும் ரிக் வாகனங்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களில், எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
நாள் ஒன்றிற்கு, 19 கோடி ரூபாய் வரியாக தமி-ழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று மத்திய அரசுக்கும், 240 கோடி ரூபாய் டீசல் வழி-யாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்னைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

