sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

/

ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

2


ADDED : ஆக 26, 2025 01:48 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:48 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட நாமக்கல்-துறையூர் சாலையில், ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை மூலம் ரோடு விரிவாக்கம் செய்ய அரசிடம் நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டது.

இதை தொடர்ந்து, முதல் கட்டமாக, 9.20 கி.மீ., துாரத்திற்கு, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, தடுப்பு சுவர் அமைத்தல், சிறு பாலம் கட்டுதல், துாசூர் கடக்கால் பகுதி

யில் உயர் மட்ட பாலம் அமைத்தல், சாலை அகலப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணியை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, சாலையின் அகலம், ஜல்லி கலவையின் விகிதத்தை பரிசோதித்தார். மேலும், சாலைப்பணிதய தாமதமின்றி, விரைவாக, தரத்துடன் முடிக்க உத்தரவிட்டார். சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us