sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் அரசு கல்லுாரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

/

நாமக்கல் அரசு கல்லுாரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நாமக்கல் அரசு கல்லுாரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நாமக்கல் அரசு கல்லுாரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


ADDED : அக் 29, 2025 01:25 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்கவும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார்.

கூடுதல் எஸ்.பி., அண்ணாதுரை, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எஸ்.பி., விமலா, பேரணியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, மீண்டும் கல்லுாரியில் முடிந்தது.

பேரணியில், சாலை விபத்துகளால் ஏற்படும் விளைவுகள்; அவற்றை தடுக்க வேண்டியதன் அவசியம்; விபத்துகளில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில், சாலை பாதுகாப்பு பயிற்சியாளர் மதுரை நரசிம்ம மணி, ''சாலையை நாம் எவ்வாறு கடக்க வேண்டும்; என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது, விபத்துக்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது,'' என்பது குறித்து திரை மூலம் விளக்கினார்.






      Dinamalar
      Follow us