/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரம் பால பணி: தடுப்பு வைக்க கோரிக்கை
/
சாலையோரம் பால பணி: தடுப்பு வைக்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 06:57 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, பருத்திப்பள்ளியில் இருந்து கொன்-னையார் செல்லும் வழியில் உள்ள சீத்தக்காடு முத்து முனி-யப்பன் கோவில் பின்புறம், மழைநீர் தேங்காமல் செல்ல ஏது-வாக, சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டி சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, சாலையையொட்டி பேரிகார்டுகள் எதுவும் வைக்கப்-படவில்லை. குறிப்பாக, இப்பகுதியில் மின்கம்பங்கள் இல்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்க, பள்ளத்தை-யொட்டி, பேரிகார்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

