/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டுறவு குறித்த சிறந்த பாடலுக்கு ரூ.50,000
/
கூட்டுறவு குறித்த சிறந்த பாடலுக்கு ரூ.50,000
ADDED : ஏப் 26, 2025 01:08 AM
நாமக்கல்:நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின், மண்டல இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்ட அறிக்கை: நடப்பு, 2025ம் ஆண்டை, சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, அனுப்பப்படும் பாடல், இசையமைக்கப்பட்டு, ஐந்து நிமிடம் ஒலிபரப்பக்கூடிய வகையில், பாடல் வரிகள் இருக்க வேண்டும்.
தமிழில், கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடலாக இருக்க வேண்டும். கூட்டுறவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு பற்றிய எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக்கூடியதாக பாடல் வரிகள் இருக்க வேண்டும். சிறந்த பாடல் தேர்வு குழுவால் தேர்ந்தெடுக்கப்படும். சிறந்த பாடலுக்கு, 50,000 ரூபாய்க்கான பண முடிப்பு மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்படும்.
அனுப்பப்படும் பாடலின், 'ஹாட் காப்பி'யை, கூரியர் அல்லது தபால் மூலம், 'மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராசன் மாளிகை, நெ.170. பெரியார் ஈ.வெ.ரா., நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை--600010' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பாடலின், 'ஷாப்ட் காப்பியை' தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் tncu08@gmail.com என்ற இணையதள முகவரிக்கும், வரும் மே, 30, மாலை, 5:00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

