/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ. 8.58 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்
/
ரூ. 8.58 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம்
ADDED : நவ 08, 2024 01:30 AM
ப.வேலுார், நவ. 8--
ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு. வியாழக்கிழமை அரசு விடுமுறையால் ஏலம் நடைபெறவில்லை. நேற்று நடந்த ஏலத்துக்கு, 6,660 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று, 133.95 ரூபாய், குறைந்தபட்சமாக, 120 ரூபாய், சராசரியாக, 130.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் எட்டு லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.