ADDED : ஜூன் 30, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் ஆவத்திபாளைம், ஜனதா நகர், சத்யா நகர், காவிரி நதியோர தெரு, நாட்டாகவுண்டன் புதுார், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள், காவிரி ஆற்றங்கரையோரம் உள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது, இந்த ஆற்றங்கரையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்து விடும்.
தற்போது, ஆற்றில் தண்ணீர வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று முன்தினம் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று காலை, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி பள்ளிப்பாளையம் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் ஆவத்திபாளையம், சந்தைப்பேட்டை, நாட்டாகவுண்டம்புதுார் பகுதியில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்