/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், 'உங்களுடன் ஸ்டாலின்' நிகழ்ச்சியால் அலுவலர்களுக்கு ஏற்படும் பணி நெருக்கடியை குறைக்க வலியுறுத்தியும், முகாம் நடத்துவதற்கு தேவையான நிதியை விடுவிக்க கோரியும் மாநில அரசை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநில அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
அதன்படி நேற்று, மல்லசமுத்திரம் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலவிநாயகம் தலைமை வகித்தார். வட்டாரத்தில் உள்ள அனைத்து நிலை அலுவலர்களும் கறுப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.