/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
/
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 30, 2025 01:56 AM
நாமக்கல், : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னுவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை, 10,000 ரூபாயாக உயர்த்தி, பஞ்., மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 2009 ஜூன், 1 அரசாணைப்படி, மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தம் செய்ய வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிகாலத்தை கருத்தில்கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம், 15,000 ரூபாய் வழங்க வேண்டும். பஞ்., செயலாளர்களை, தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, பஞ்., ஒன்றிய எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்
களின் பணிக்காலத்தை கருத்தில்
கொண்டு, வட்டார, மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மூன்று ஆண்டுகள் பணி முடித்த துாய்மை பணியாளர்களை, சிறப்பு காலமுறை ஊதியத்திலும், 10 ஆண்டு பணி முடித்தவர்களை காலமுறை ஊதிய கட்டுக்கு மாற்றம் செய்து, நகராட்சி நிர்வாகத்துறையில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் பெறும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

