/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
/
சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
ADDED : அக் 02, 2024 07:31 AM
நாமக்கல்: 'சேலம், நாமக்கல் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில், பயணியர் வசதிக்காக கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது' என, தென்னக ரயில்வே அறிவித்துள்-ளது.
இதுகுறித்து, தென்னக ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
தென்னக ரயில்வேயில், தற்போது தலா, 8 பெட்டிகளுடன் இயக்கப்படும், 5 பாசஞ்சர் ரயில்களில், பயணியர் வசதிக்காக, அக்., 1 முதல் வரும், 31 வரை கூடுதலாக, 4 பெட்டிகள் இணைக்-கப்பட்டுள்ளன.
அதன்படி, சேலத்தில் இருந்து ராசிபுரம், நாமக்கல், மோகனுார், கரூர், திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரயில் (ரயில் எண். 16811/16812) மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி, கரூர், மோகனுார், நாமக்கல், ராசிபுரம் வழியாக சேலம் செல்லும் பாசஞ்ர் ரயில் ஆகியவற்றில், இனி, 8 பெட்டிக-ளுக்கு பதிலாக, 12 பெட்டிகள் இணைக்கப்படும். இதுவரை, 800 இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரயிலில், இனி, 1,200 இருக்-கைகளாக அதிகரிக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

