sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவர்களுக்கு ஆசிரியர் 'தொல்லை' நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை

/

மாணவர்களுக்கு ஆசிரியர் 'தொல்லை' நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை

மாணவர்களுக்கு ஆசிரியர் 'தொல்லை' நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை

மாணவர்களுக்கு ஆசிரியர் 'தொல்லை' நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை


ADDED : செப் 24, 2024 01:17 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த, விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்-பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக, கடந்த ஆக., 18ல் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, மாணவர்கள், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசா-ரணை நடத்தி, ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். ஆனால், ஆசிரியர் மீது எந்த நடவ-டிக்கையும் எடுக்கவில்லை. அவர், மீண்டும் அந்த பள்ளியிலேயே பணிபுரிந்து வருகிறார். இதையறிந்த பெற்றோர், மாணவர்கள், நாம் தமிழர் கட்சியினருடன் இணைந்து, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில், நேற்று பள்ளியை

முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவரம்பன், பேச்சுவார்த்தை நடத்-தினார். அப்போது, பாலியல் சீண்டலுக்குள்ளான மாணவர்கள், ஆசிரியர் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தங்களை ஒரு சமுதாயத்தை சேர்ந்த, 40க்கும்

மேற்பட்டோர் மிரட்டுவதா-கவும் புகார் மனு கொடுத்தனர்.அதன்படி, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us