sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கபிலர்மலை அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது

/

கபிலர்மலை அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது

கபிலர்மலை அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது

கபிலர்மலை அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது


ADDED : பிப் 13, 2024 12:24 PM

Google News

ADDED : பிப் 13, 2024 12:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: கபிலர்மலை அருகே, மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே நடந்தை கிராமம், சூரம்பாளையத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து லாரியில் மண் ஏற்றிக்கொண்டு, சில தினங்களாக கபிலக்குறிச்சி வழியாக இருக்கூருக்கு அதிவேகமாக குடியிருப்பு பகுதியில் லாரி சென்று வந்துள்ளது.

மேலும், மண் ஏற்றிய லாரி மேல் பகுதியை மூடாமல் சென்றதால், அப்பகுதியில் மண் பறந்து டூவீலர்களில் செல்பவர்களின் கண்களில் படுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, லாரியில் மண் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக குடியிருப்பு பகுதியில் வந்த லாரியை, கபிலர்மலையை சேர்ந்த மக்கள் சிறை பிடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த பாண்டமங்கலம் ஆர்.ஐ., பூங்கொடி நடத்திய விசாரணையில், சேந்தமங்கலம் அருகே, புதுக்கோட்டையில் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, கபிலர்மலை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மண் கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ஆர்.ஐ., பூங்கொடி கொடுத்த புகார்படி, லாரியை பறிமுதல் செய்த ஜேடர்பாளையம் போலீசார், திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன், 45, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us