sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வு; விருப்பம் உள்ளவர் விண்ணப்பிக்க அழைப்பு

/

சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வு; விருப்பம் உள்ளவர் விண்ணப்பிக்க அழைப்பு

சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வு; விருப்பம் உள்ளவர் விண்ணப்பிக்க அழைப்பு

சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வு; விருப்பம் உள்ளவர் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : மே 09, 2024 06:40 AM

Google News

ADDED : மே 09, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : 'மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், சட்ட தன்னார்வ தொண்டர்கள், 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லி தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள், 50 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இப்பணிக்கு, ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்.எஸ்.டபிள்யூ., மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சட்டக்கல்லுாரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், திருநங்கைகள், அடிப்படை கல்வி அறிவுள்ளவர்கள், கணினி அறிவுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் https://namakkal.dcourts.gov.in/ என்ற நாமக்கல் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், வரும், 15க்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற இணைய தளத்தில் மட்டுமே வெளியிடப்படும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. அடிப்படை சம்பளம், ஊதியம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப்பணிகள் குழுக்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us