sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாக்கடையில் மண் கொட்டி அடைப்பு செல்ல வழியின்றி சுகாதார சீர்கேடு

/

சாக்கடையில் மண் கொட்டி அடைப்பு செல்ல வழியின்றி சுகாதார சீர்கேடு

சாக்கடையில் மண் கொட்டி அடைப்பு செல்ல வழியின்றி சுகாதார சீர்கேடு

சாக்கடையில் மண் கொட்டி அடைப்பு செல்ல வழியின்றி சுகாதார சீர்கேடு


ADDED : ஜூன் 12, 2025 01:54 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., 14வது வார்டு மேற்கு தெரு பகுதி, சீராப்பள்ளி டவுன் பஞ்., எல்லையில் அமைந்துள்ளது. மேற்கு தெருவில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சீராப்பள்ளி டவுன் பஞ்., எல்லை மற்றும் நாமகிரிப்பேட்டை கற்றாழைப்பேட்டை அருகே செல்கிறது. ஆனால், நிலப்பரப்பு அமைப்பை பொறுத்தவரை சீராப்பள்ளி டவுன் பஞ்., வழியாக செல்லத்தான் வடிகால் அமைப்பு உள்ளது. இதனால் கழிவுநீரின் பெரும்பகுதி சீராப்பள்ளி எல்லை பகுதிக்கு சென்றுவிடுகிறது.

இதனால், சீராப்பள்ளி எல்லையில் வசிப்பவர்கள் கழிவுநீர் வருவது குறித்து தொடர்ந்து புகாரளித்து வந்தனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன், சீராப்பள்ளி டவுன் பஞ்., நிர்வாகத்தினர் சீராப்பள்ளிக்கு வரும் சாக்கடை கால்வாயில் மண் கொட்டி அடைத்துவிட்டனர். இதனால், சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்க தொடங்கியது. வெளியேறும் பகுதியில் அடைத்து விட்டதால், தெரு பகுதியில் உள்ள சாக்கடையிலும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., நிர்வாகித்திடம் புகாரளித்தனர். அதன்படி, சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, சீராப்பள்ளி டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கேட்டபோது, 'சாக்கடையில் யார் மண் கொட்டினார்கள் என, தெரியவில்லை. அப்பகுதியில் வசிப்பவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் இதை செய்திருக்கலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us