/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மன்மோகன் சிங் மறைவு மவுன ஊர்வலம், மலரஞ்சலி
/
மன்மோகன் சிங் மறைவு மவுன ஊர்வலம், மலரஞ்சலி
ADDED : டிச 29, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மன்மோகன் சிங் மறைவு
மவுன ஊர்வலம், மலரஞ்சலி
குமாரபாளையம், டிச. 29-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, குமாரபாளையத்தில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம், மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஆனங்கூர் பிரிவு சாலையில் தொடங்கிய மவுன ஊர்வலத்தில், காங்., நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.
சேலம் சாலையில் நடந்த மவுன ஊர்வலம், நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் உருவ படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், தி.மு.க., கூட்டணி கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.

