/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டுக்கூடு 118 கிலோ ரூ.45,000க்கு ஏலம்
/
பட்டுக்கூடு 118 கிலோ ரூ.45,000க்கு ஏலம்
ADDED : அக் 23, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டுக்கூடு 118 கிலோ
ரூ.45,000க்கு ஏலம்
ராசிபுரம், அக். 23-
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது.
நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 118 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 450 ரூபாய், குறைந்தபட்சம், 330 ரூபாய், சராசரி, 382 ரூபாய் என, 118 கிலோ பட்டுக்கூடு, 45,000 ரூபாய்க்கு விற்பனையானது.