/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ. 2 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
/
ரூ. 2 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
ADDED : ஜூலை 25, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம் :ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது.
நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 493.5 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சம் கிலோ, 505 ரூபாய், குறைந்தபட்சம், 400 ரூபாய், சராசரி, 400 ரூபாய் என, 493.5 கிலோ பட்டுக்கூடு, இரண்டு லட்சத்து, 469 ரூபாய்க்கு விற்பனையானது.