/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு கோலப்போட்டி
/
எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு கோலப்போட்டி
ADDED : நவ 11, 2025 02:17 AM
நாமக்கல், எஸ்.ஐ.ஆர்., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப்போட்டி நடந்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, வரும், 2026 ஜன., 1ஐ, தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, (எஸ்.ஐ.ஆர்.,) இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், கடந்த, 4 முதல், வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்
கெடுப்பு படிவம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இப்பணி, வரும் டிச., 4 வரை நடக்கிறது. இப்பணிகளில், அங்கன்வாடி பணியாளர்கள், எழுத்தர் பணியாளர்கள் (நகர்புறம்), ஒப்பந்த ஆசிரியர்கள், மதிய உணவு பணியாளர்கள், ஊராட்சி செயலாளர், ஆசிரியர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம அளவிலான பணியாளர்கள் என மொத்தம், 1,629 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரங்கோலி கோலப்போட்டி நடந்தது.
கலெக்டர் துர்கா மூர்த்தி, விழிப்புணர்வு கோலங்களை பார்வையிட்டார். நாமக்கல் எஸ்.பி., விமலா, டி.ஆர்.ஓ., சரவணன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, லெனின் உள்பட பலர் பங்கேற்றனர்.

