ADDED : ஆக 28, 2024 08:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நாமக்கல் நரசிம்மர் கோவில் அருகே, பக்தர்கள் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. அங்கு ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், நேற்று இரவு நரசிம்மர் கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பக்தர்கள் உறியடித்தும், வழுக்கு மரம் ஏறியும் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.