/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீட்டின் மேற்கூரையில் பதுங்கிய பாம்பு மீட்பு
/
வீட்டின் மேற்கூரையில் பதுங்கிய பாம்பு மீட்பு
ADDED : ஜன 02, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், ஜன. 2-
பள்ளிப்பாளையம் அருகே, டி.வி.எஸ்.,மேடு பகுதியில்  ஏராளமான வீடுகள் உள்ளன. அதில் சிமென்ட் அட்டையால் வேயப்பட்ட வீட்டின் மேற்கூரையில், 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்டு, வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும் வெளியேறினர். பின், அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், வீட்டின் மேலே ஏறி கூரையில் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்து, காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

