/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மார்கழி மாத முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
/
மார்கழி மாத முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
மார்கழி மாத முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
மார்கழி மாத முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : டிச 22, 2025 08:25 AM

நாமக்கல்: மார்கழி முதல் ஞாயிறான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.நாமக்கல் மாநகரின் மைய பகுதியில் அமைந்-துள்ள நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோவில் எதிரே, ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்-துள்ளது.
இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்-பாலிக்கிறார். சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடை-பெறும். அதன்படி, மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழ-மையான, நேற்று காலை, 10:00 மணிக்கு ஆஞ்ச-நேயருக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்-பட்டது.
தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற-வைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்-யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தமிழ-கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு, 7:00 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

