/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 19, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே, மரூர்பட்டி பெரியமலை பெருமாள் கோவில் அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று, தை முதல் சனிக்கிழமையையொட்டி, பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. முன்னதாக, மலை உச்சியில் உள்ள பெரியமலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.