/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக., 20ல் பள்ளி, கல்லுாரி மாணவருக்கு பேச்சுப்போட்டி
/
ஆக., 20ல் பள்ளி, கல்லுாரி மாணவருக்கு பேச்சுப்போட்டி
ஆக., 20ல் பள்ளி, கல்லுாரி மாணவருக்கு பேச்சுப்போட்டி
ஆக., 20ல் பள்ளி, கல்லுாரி மாணவருக்கு பேச்சுப்போட்டி
ADDED : ஜூலை 31, 2025 02:00 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, தனித்தனியே பேச்சுப்போட்டி, வரும் ஆக., 20ல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு, காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரையும், கல்லுாரி மாணவர்களுக்கு, மதியம், 1:30 மணி முதல் தொடங்கி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000, இரண்டாம் பரிசு, 3,000, மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்படும்.
மேலும், அரசு பள்ளி மாணவர்கள், இரண்டு பேர் தனியாக தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை, 2,000 ரூபாய் வழங்கப்படும். இதேபோல், கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000, இரண்டாம் பரிசு, 3,000, மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்படும்.
விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04286--292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.