/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேகமாக சென்று விபரீதம்; கீழே விழுந்து ஒருவர் பலி
/
வேகமாக சென்று விபரீதம்; கீழே விழுந்து ஒருவர் பலி
ADDED : நவ 20, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், 55; விசைத்தறி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பர் அங்கமுத்து, 45, என்பவரும், நேற்று முன்தினம் இரவு, 12:05 மணிக்கு, கோட்டைமேடு அருகே, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.
டூவீலரை ஓட்டிய அங்கமுத்து, வேகமாக இயக்கி உள்ளார். இதில் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த ஈஸ்வரனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஈஸ்வரன் மகள் இளவரசி, 29, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.