ADDED : ஆக 08, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.கவுண்டம்பாளையம் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. முகாமில், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ் குமார் எம்.பி., பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.
முகாமில் உரிமைத்தொகை விண்ணப்பிக்க பெண்கள் ஆர்வம் காட்டினர். ஒன்றிய ஆத்ம குழு தலைவர் துரைசாமி, தாசில்தார் சசிகுமார், பி.டி.ஓ.,க்கள் வனிதா, கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.