sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 238 முகாம்: மக்கள் பயன்-பெற அழைப்பு

/

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 238 முகாம்: மக்கள் பயன்-பெற அழைப்பு

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 238 முகாம்: மக்கள் பயன்-பெற அழைப்பு

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 238 முகாம்: மக்கள் பயன்-பெற அழைப்பு


ADDED : ஜூலை 07, 2025 04:44 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மாவட்டத்தில், 238 சிறப்பு முகாம் நடக்கிறது என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 238 சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம், வரும், 15ல், தொடங்கி, 40 நாட்கள் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்-டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடக்கும் நாள், இடம் குறித்த விபரங்கள், அங்கு வழங்கப்பட உள்ள பல்வேறு அரசு துறை-களின் திட்டங்கள் மற்றும் சேவைகளை விவரித்து, அவற்றில் பயன் அடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு, தகவல் கையேட்டையும் வழங்க உள்-ளனர். மேலும், இந்த முகாம்களில், 'மகளிர் உரிமைத்தொகை' பெற தகுதி உள்ள, விடுபட்ட மகளிர் யாராவது இருந்தால், முகாம் நடக்கும் நாள் அன்று முகாமிற்கு சென்று, தங்கள் விண்ணப்-பத்தை அளிக்கலாம். 'மகளிர் உரிமை தொகை' திட்டத்திற்கான விண்ணப்பம், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் குறித்த விபரங்களை, பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. இந்த பணி, 3 மாதங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us