sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவருக்கு பாலியல் தொல்லை வார்டன் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

மாணவருக்கு பாலியல் தொல்லை வார்டன் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

மாணவருக்கு பாலியல் தொல்லை வார்டன் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

மாணவருக்கு பாலியல் தொல்லை வார்டன் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : மே 11, 2025 03:03 AM

Google News

ADDED : மே 11, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட, தனியார் மெட்ரிக் பள்ளி விடுதி வார்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்தவர், 14 வயது மாணவர்; இவர், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இங்கு, விடுதி வார்டனாக, எருமப்பட்டி அடுத்த திப்ரமாதேவியை சேர்ந்த வினோத், 26, பணியாற்றினார். இந்நிலையில், விடுதியில் தங்கி படித்த மாணவருக்கு, 2024 ஆக., 4ல், இரவு, 11:00 மணிக்கு, வார்டன் வினோத், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதேபோல், கடந்த ஏப்., 3ல், தண்டனை எனக்கூறி மீண்டும் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, மாணவன், தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவரின் பெற்றோர், மோகனுார் போலீசில் புகாரளித்தனர். போக்சோ வழக்குப்

பதிவு செய்த போலீசார், வார்டன் வினோத்தை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, விடுதி காப்பாளர் வினோத்தை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், நாமக்கல் கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து கலெக்டர் உமா, வினோத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us