/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர் திறன் மேம்பாடு விழா
/
அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர் திறன் மேம்பாடு விழா
அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர் திறன் மேம்பாடு விழா
அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர் திறன் மேம்பாடு விழா
ADDED : நவ 23, 2025 01:32 AM
ராசிபுரம், நராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தில், அரசு உதவிபெறும் செங்குந்தர் மகாஜன பள்ளியில், மாணவர் திறன் மேம்பாடு மற்றும் ஊக்கப்படுத்துதல் விழா நடந்தது. அதில், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தனித்திறமை, குழு திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர், மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர், மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்திய வினாடி-வினா, பேச்சு போட்டிகளில் செங்குந்தர் பள்ளி மாணவியர் நிவேதா, திவ்யாஸ்ரீ, ஆத்மசாதகி, பூஜா ஆகியோர், தலா முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.
மாணவிகளுக்கு இஸ்ரோ வழங்கிய பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கி பாராட்டினர். பள்ளிகளுக்கிடையே நடந்த கலைத்திருவிழா நிகழ்ச்சிகளில் வட்ட, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

