sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குவியும் குப்பையால் மாணவர்கள் அவதி

/

குவியும் குப்பையால் மாணவர்கள் அவதி

குவியும் குப்பையால் மாணவர்கள் அவதி

குவியும் குப்பையால் மாணவர்கள் அவதி


ADDED : ஜூலை 14, 2025 07:16 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூர் கேட் அமைந்துள்ளது. குருக்கபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஆண்டகளூர் கேட் முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கு அரசு கலைக்கல்லுாரி, கால்நடை மருந்தகம், மாணவ, மாணவிகளின் விடுதிகள் ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி ஈரோடு, கோவை, நாமக்கல், மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் இவ்வழியாக பஸ்கள் செல்கின்றன. இதனால், எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

ஆண்டகலுார் கேட்டில் ஓட்டல், டீக்கடைகள் அதிகம் உள்ளன. இதில் இருந்து வரும் குப்பைகளை ஊராட்சி துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் காலை நேரடியாக வந்து குப்பைகளை வாங்கி சென்று விடுகின்றனர். அதன் பிறகு சேகரிக்கப்படும் குப்பைகளை ஆண்டகலுார் கேட் பஸ் ஸ்டாப் அருகே கொட்டி விடுகின்றனர். மலைபோல் குவிக்கப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இரண்டு தினங்களுக்கு ஒருமுறை சாலையோர குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us